பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 14 செப்டம்பர், 2024

பாடலின் வரிகள் - நெஞ்சமே நெஞ்சமே , மாமன்னன்

படம் : மாமன்னன் (2023)
பாடியவர்கள்  : விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கோபாலன் 
பாடல் எழுதியவர் : யுகபாரதி
இசை : A.R.ரகுமான்




நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ... ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


கண்ணோரம்
கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே

உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே
பாடல் நீ..யே.. ஓஓ ஓஓ ஓ...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ... என்னிலே
வண்ணமாய்... பொங்குதே
ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..


நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததால்
திக்கெல்லாம் வெள்ளிமீனே
நீ... தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லைத் தேனே


ஓ ஓ ஓ ஓ செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
தித்திப்பு முத்தமே கொஞ்சம் தாயேன்


செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டிப்போயேன்..
காட்டுக்கே கூட்டிப்போயேன்


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்


ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...


நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..


கமல் ஹாசன் எனும் ஒரு யூனிவர்சிட்டி

 ஓவியா ஜூலி கலந்துக்கிட்ட பிக் பாஸ் பாத்ததோட சரி , அதுக்கு அப்பறம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியும் பாத்தது இல்ல . 

சமீபத்துல கமல் சார் பிபி பாஸ் நிகழ்ச்சியில இருந்து பிரேக் எடுக்க போறதா நியூஸ் பாத்தேன் . என்னடா இது இப்படி ஆகிடுச்சே எதுக்காக இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கலனு பாத்தா மனுஷன் AI டெக்னாலஜி பத்தி 4 மாசம் கோர்ஸ் படிக்க அமெரிக்கா போகுறாராமே .

இவரால இந்த வயசுலயும் எப்படி இவ்ளோ ஆர்வமா எதாவது ஒன்னு படிக்க இல்ல கத்துக்க முடியுது ?

உங்களுக்கு நியாபகம் இருக்கானு தெரியல , நமக்கு Confrence Call-னா என்னனு பஞ்சதந்திரம் படத்தின் மூலமா நமக்கு அறிமுகம் செஞ்சுவெச்சது கமல் சார் தான். 

Bluetooth headphone -னுங்குற கான்செப்ட்-ஐ நமக்கு வசூல் ராஜா MBBS படத்தின் மூலமா அறிமுகம் செஞ்சுவெச்சது கமல் சார் தான் .



விக்ரம் (1986):
சைபர் நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்த த்ரில்லர் கதை.

அபூர்வ சகோதரர்கள் (1989)
Motion Control Camera:
கமல் ஹாசன் மூன்று வேடங்களில் நடித்தார், இதில் மெர்கல் ஷாட் பயன்படுத்தப்பட்டது. இது காட்சிகளில் மூன்று வேடங்களில் உள்ள கமலை ஒரே காட்சியில் இணைத்து காட்ட உதவியது.

காமெரா டிரிக்குகள் (Camera Tricks):
மூன்று கதாபாத்திரங்களை ஒரே காட்சியில் இணைக்கும் தொழில்நுட்பம்.

தேவர்மகன் (1992)
எக்ஸ்ட்ரீம் ஸ்லோ மோஷன் (Extreme Slow Motion):
சண்டைக் காட்சிகளில் ஸ்லோ மோஷன் பயன்படுத்தி காட்சியை மேலும் விவரமாகத் தரம் உயர்த்தியது.

குருதிப்புனல் (1995)
முதல் டிஜிட்டல் ஒலி:
இந்த திரைப்படத்தில் முழுமையான டிஜிட்டல் ஒலித் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

இந்தியன் (1996)
ரூ 100 கோடி கிளப்:
ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம்.

ஹே ராம் (2000)
Polaroid Production:
கதாபாத்திரங்களின் நுணுக்கமான நடிப்புகளை படம்பிடிக்க உதவியது.

ஆளவந்தான் (2001)
ஆனிமேட்ரானிக்ஸ் (Animatronics):
சண்டைக் காட்சிகளுக்கு அதிக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காமிக்ஸ் அனிமேஷனை காட்சிப்படுத்தினர்.

ஸ்டடி-கேம் (Steadicam):
ஸ்டேபிளான (நிலையான) காட்சிகளை உருவாக்க ஸ்டடி-கேம் பயன்படுத்தப்பட்டது.

மும்பை எக்ஸ்பிரஸ் (2005)
ஏரோமோபில் கேமரா (Aeromobile Camera):
வானில் இருந்து காட்சிகளை பிடிக்க பயன்படுத்தப்பட்டது.

தசாவதாரம் (2008)
புதிய மேக்கப் தொழில்நுட்பம்:
கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்தார், இவ்வேடங்களில் தனித்துவமான தோற்றத்தை பெற மேக்கப் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. Prosthetic makeup

மோஷன் கேப்ச்சர் (Motion Capture):
வேடங்களில் அசைவுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்த இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

உன்னைப் போல ஒருவன் (Unnai Pol Oruvan) (2009)
Auro 3D Sound:
இந்த படத்தில் பயன்படுத்திய முதன்மையான 3D சவுண்ட் தொழில்நுட்பம்.

விஸ்வரூபம் (2013)
முதல் டிஜிட்டல் படம்:
இந்திய திரையுலகில் முழுமையான டிஜிட்டல் திரைப்படமாக இதைப் பயன்படுத்தினார்.

விஎஃபெக்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்:
போர்க்கள காட்சிகள் மற்றும் நகரத்தின் சிதைவுகளை விஎஃபெக்ட்ஸ் (VFX) மூலம் வடிவமைக்கப்பட்டது.

இந்த படத்துக்காக ஒரு பெரிய நடன ஜாம்பவான் கிட்ட சில மாசம் நடனம் கத்துக்கிட்டார்  உன்னை காணாத-ங்குற  அந்த ஒரு பாடலுக்காக .

விஸ்வரூபம் 2 
முதல் முழுமையான ஸ்டீரியோஸ்கோபிக் திரைப்படம் (Stereoscopic Film).
'விஸ்வரூபம் 2' திரைப்படம் இந்திய சினிமாவில் முழுமையான ஸ்டீரியோஸ்கோபிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்திய முதல் படமாகும். 
இது 3D அனுபவத்தை வழங்கும் தொழில்நுட்பமாகவும், பார்வையாளர்களுக்கு மிக நெருங்கிய மற்றும் ஆழமான காட்சிகளை உணர்விக்க உதவியது.

விக்ரம் (2022):
சினிமா நேரலை (Live Streaming Cinema) – முதன்முறையாக பட ரீலீஸ் நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினர்.


தான் செய்யும் தொழில் மேல அதீத மரியாதை , காதல் , அர்ப்பணிப்பு இருக்கு ஒருத்தராலதான் இப்படி புது புது முயற்சிகளை எடுக்கவோ அறிமுகப்படுத்தவோ முடியும் .

இவரை ஒரு யூனிவர்சிட்டி-னு சொல்றதுல தப்பே இல்ல .

இவருடைய எத்தனையோ படங்கள் வசூல் ரீதியா சரி போகல , ஆனாலும் அவர் தன்னுடைய முயற்சியை விடல இப்போ வரைக்கும் .

ஆனா காலத்துக்கும் நிலைக்க போறது இவருடைய படங்களே.

இவருடைய பிள்ளைகளுடைய பேட்டி சமீபத்தில் பாத்தேன் . அந்த பிள்ளைங்ககிட்ட எவ்ளோ தெளிவு .
எங்களுடைய செலவை நாங்கதான் பாத்துக்கணும் . வீட்டுக்கு ரெண்ட் தரவேண்டாமா? இவ்ளோ வேலை செய்றேன் , இங்க வேலை செய்றேன்-னு எவ்ளோ ஒரு maturity .எங்களுக்கு என்ன சேது வச்ச என்ன கொடுத்தனு இல்லமா எங்களை நாங்களே பாத்துக்குறோம்னு இருக்குறதுக்கு ஒரு பெரிய பக்குவம் வேணும்.

இவர் நினைச்சிருந்தா பல பல கோடிகளை சேர்த்திருக்கலாம் .ஆனா வர பணத்தை மறுபடியும் படம் எடுக்குறதுலே செலவு பண்றார் .

பெத்த பிள்ளைங்களுக்கு மட்டும் இல்ல பேரப் பிள்ளைங்களுக்கு அதையும் தான்டி கொள்ளு பேரப்பிள்ளைங்களுக்கு சொத்து சேர்த்து வைக்குறவங்க மத்தியில இப்படி ஒரு மனுஷன்.